search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச கல்வி"

    • இலவச கல்வி திட்டத்தில் 25 சதவீத மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அலுவலர் கூறினார்.
    • நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயனடையலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பள்ளியின் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத மாணவர்களைச் சேர்ப்பதற்கு 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர்சேர்க்கை 20.04.2023 முதல் 18.05.2023 வரை இணைய வழியில் நடைபெற உள்ளது.

    பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையமுகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் குழந்தை யின் வயது 31.7.2023 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 4 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

    அதாவது 1.8.2019 முதல் 31.7.2020-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏதேனும் 5 பள்ளி களுக்கு விண்ணப்பி க்கலாம்.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தை களை சேர்ப்பதற்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கு வதற்காக அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை செயல்படும் உதவி மையம் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணையவழி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு இந்த உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

    உதவி மைய ஆலோ சகர்களாக கோபால், மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் (கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்) தொலைபேசி எண் 76399 54011 நியமனம் செய்யப்ப ட்டுள்ளார். உதவி வேண்டு வோர் அலுவலக நேரங்க ளில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இணையவழியில் இன்று முதல் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி, சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப்பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் இன்று முதல் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.

    முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2019 முதல் 31-7-2020-க்குள்ளாகவும், 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2017 முதல் 31-7-2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். மாணவர்களின் புகைப்படம், மாணவர், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று, வருமான சான்று, சாதிச்சான்று, முன்னுரிமை ஏதேனும் இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்.

    நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெற்றால் குலுக்கல் முறையில் வருகிற மே மாதம் 23-ந் தேதி அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்ற எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் தகுதியான விண்ணப்பங்கள் முதலில் சேர்க்கை வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • ராம்கோ நூற்பாலை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.42 லட்சம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன், மூத்த பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி ஆகிேயார் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராம்கோ நூற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வருடா வருடம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த வருடமும் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சுமார் 1,905 தொழிலாளர்கள் குழந்தைகளுடன் வந்து கல்வி உதவித்தொகையாக ரூ.42 லட்சம் பெற்றனர். விழாவில் தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன், மூத்த பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி ஆகியோர் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.

    தொழிற்சங்கத்தின் சார்பில் எச்.எம்.எஸ். பொது செயலாளர் என்.கண்ணன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஆர். கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×